சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

0 250
Stalin trichy visit

திருச்சி, ஆக.13  ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 20 க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

பயணிகள் உடைமை, பார்சல்கள், ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.