சிறப்பு கண்பரிசோதனை முகாம்!
திருச்சி சமயபுரம் கு.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியும், திருச்சி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் சிறப்பு கண்பரிசோதனை முகாமை நடத்தியது. கண் மருத்துவ முகாமை கல்லூரியின் நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் சீனிவாசன் ஆகியோர்
தொடங்கி வைத்தனர். முகாமில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என திரளானவர்கள் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் நாகராஜன், (இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்), பாலகுமார் (தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் செய்திருந்தனர்.