தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம்
திருச்சி, மே 28 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ்பாபு, நடராஜன், போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், செந்தில், அருண்குமார், முகமது மீரான், தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.