கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
திருச்சி,ஆக.23 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூர், திருவளர்ச்சிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் கால்நடை மருத்துவமுகாம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தும், சிறப்பான முறையில் கால்நடைகளை பராமரித்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா, உதவி இயக்குநர் மூர்த்தி மற்றும் கால்நடை மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.