ஸ்ரீரங்கத்தில் மாணவர்கள் சேர்க்கை பேரணி
திருச்சி, ஜூன் 14. திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாணவர்கள் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது. பேரணியை ஸ்ரீரங்கம்கோட்ட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீடுமக்கள் அனைவரும் அறிந்து தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டிமாணவர் சேர்க்கைப் பேரணி பள்ளி மேலாண்மைக் குழுவினரால் நடத்தப்பட்டது.
தமிழ்வழிக் கல்வியில் படிக்கின்ற மாணவர்களுக்கு20% இடஒதுக்கீடுஅரசு வேலைப்பில்அதை அறிந்துதமிழ் வழிக் கல்வியில் தங்கள் குழந்தைகளைசேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கைப் பேரணியை தன்னார்வலர்கள் முன்னெடுத்து நடத்தினார். இதில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்களும், தன்னார்வலர்கள், தலைமையாசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முதல் முறையாக மாணவர்கள் யாரும் பங்கு பெறாமல் நடைபெற்ற மாணவர் சேர்க்கைப் பேரணியில் ஸ்ரீரங்கம் 1,3,5,7 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கண்டார்கள்.