முதியோர் இல்லத்தில் மாணவர்கள் கலந்துரையாடல்
திருச்சி, ஏப். 18 திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள், செயின்ட் தாமஸ் மெர்சி ஹோம் வயோதிகர் இல்லத்திற்கு சென்றனர்.
அங்கு உள்ள முதியவர்களுடன் மாணவர்கள் இனிமையாக உரையாடி, நேரத்தை கழித்து, சிறப்பான நிகழ்ச்சியையும் நடத்தினர். மேலும், முதியோருக்கு தர்பூசணி பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி, அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தனர்.
சமூக பொறுப்பை உணர்ந்த மாணவர்களின் இந்த செயல் பாராட்டுதலுக்குரியது.