தேசியக் கல்லூரியில் மாணவர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு
திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தடவாளவியல் மேலாண்மைத் துறை மாணவர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு
திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவாளவியல் மேலாண்மைத் துறை (logistics) கூட்டமைப்பின் சார்பாக மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்வாக நேற்று நடைபெற்றது. ஆங்கில துறை பேராசிரியர் ஜாப் நீல் பிரவின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தடவாளவியல் துறையில் தொழில் முனைவோராக விரும்பும் மாணவர்களுக்கு பேச்சுத்திறமை மற்றும் மக்களிடையே தொழில் சார்ந்த தொடர்பு திறன் (Interpersonal skill) மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் தடவாளவியல் துறைத் தலைவர் தி. ஜஸ்டின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஜாப் நீல் பிரவின் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கேட்ட வினாக்களுக்கு பதில் அளித்தார் பேராசிரியர் . முனைவர் கனிமொழி அவர்கள் இவ்விழாவை ஒருங்கிணைத்தார்கள்.