திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.
ரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று (17.8.22) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,, சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது, பிரபாகரன், .கா.சொ.க.
கண்ணன், டாக்டர்.முத்துராஜா, மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.