56 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி – லால்குடி எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த முதுவத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 56 லட்சத்தில் முதுவத்தூர் – கீழரசூர் தேசிய நெடுஞ்சாலை வரை தார்சாலை அமைக்கும் பணியினை லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன், செயற் பொறியாளர் செல்வராஜ், பொறியாளர் அன்பு ரூபன், ஒன்றிய செயலாளர் செல்வராசா, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வக்கண்ணி ஜெயச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வெற்றிச்செல்வி ராமலிங்கம் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8