தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்
திருச்சி திருவெறும்பூர் ஆறாவது வார்டு அய்யம்பட்டி ரோட்டில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாமாரிமுத்து குடும்பத்தினரை சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கி அரசின் சார்பாக வழங்க வேண்டிய நிவாரண பொருட்கள் உடனே கிடைக்க ஆவண செய்வதாக உறுதியளித்தார் இந்நிகழ்வில் துவாக்குடி நகர மன்ற தலைவரும் நகரக் கழகச் செயலாளருமான காயம்பு மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.