பெருமிதத்தோடு அழைத்த அமைச்சர்: நிதியுதவியை வழங்கிய மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்..
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தனது தந்தையார் அன்பில் பொய்யாமொழியின் 23-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிதியுதவி அளித்தார். நிதியுதவி அளிக்கும் நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்திலை அமைச்சர் பெருமிதத்தோடு அழைத்து காசோலையை வழங்கிட செய்து, அதோடு மூத்த நிர்வாகிகளையும், மாமன்ற உறுப்பினர்களிடமும் காசோலையை வழங்கிட செய்து பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,கோட்டத் தலைவர் மு.மதிவாணன்,கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கு பெற்றனர்.