பணியாளர்களிடம் குறைகளை கேட்டார் திருச்சி மாநகராட்சி ஆணையர்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அவர்கள் அறிவித்தார். இன்று 10.06.2022ம் தேதி ஆணையர் கூட்ட அரங்கில் திரு.மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப., அவர்கள் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலருக்கு உத்திரவிட்டார்.