தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தஞ்சை, நவ. 14 தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 14.11.2023 மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.