ஒலிம்பிக் வீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் வாழ்த்து
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனலட்சுமி மற்றும் சுபா ஆகிய இருவரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020 தடகளப் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு நமது தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்

இந்த நிலையில் இவர்களை பாராட்டி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் பிரபு உள்ளார்.