திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி
திருச்சி, பிப்.13 திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் இளையோருக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வருகிற 15.02.25 அன்று 8, 10, 12, 14 மற்றும் 16 வயது (தனித்தனியே) மாணவ, மாணவிற்கான அனுமதி கட்டணமில்லாமல் நடத்தப்பட உள்ளது.
வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களுடன் கூடிய சான்றிதழ்களும், வெற்றி பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் சுழற்கோப்பைகளும் வழங்கபட உள்ளது.
தேசிய அனைத்து மாவட்டகளுக்கு இளையேயான தடகள போட்டிகளுக்கு ஆண் / பெண் இரு பிரிவுகளிலும் 13 பேர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜீ தெரிவித்துள்ளார்.