திருவெறும்பூர் அருகே குட்கா பதுக்கிய இருவர்கைது
திருச்சி, நவ.26 திருவெறும்பூர் அருகே உள்ள காட் டூர் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப் பட்டு இருப்பதாக திருவெ றும்பூர் ஏஎஸ்பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தெற்கு காட்டூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த நகுலன் (60) என்பவரை பிடித்து விசா ரித்தபோது, குறிஞ்சி நகர் முதல் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (44) என்ப வர் வீட்டில் பல்வேறு வகையான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்ததோடு குட்கா பொருட்களையும் பறிமு தல் செய்தனர்.
பின்னர் திருவெறும் பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீ சார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.