முக்கொம்பு ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் – போலீசார் விசாரணை!
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாத்தலை போலீசார் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA