“உன்னத சேவா பதக்கம்” மாநகர காவல் ஆணையர் வழங்கினார்
திருச்சி, பிப். 22 ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் 2020-2021 ஆண்டில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்குஉன்னத சேவா பதக்கம் திருச்சி மாநகரில் 8 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாநகர நவீன காவல்கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகவேல், காந்திசந்தை காவல் உதவி ஆய்வாளர் சட்டநாதன், பொன்மலைAWPS காவல் ஆய்வாளர் அசீம், OD at Crime குற்றப்பிரிவு ராஜ்குமார், SJ&HR ஆய்வாளர் விஜயகுமார், AWPS கன்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் உஷாநந்தினி, உறையூர் காவல் ஆய்வாளர் ராமராஜன், அரியமங்கலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோருக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற கவாத்து பயிற்சியில் உன்னத சேவா பதக்கங்களை மாநகர காவல் ஆணையர் காமினி வழங்கினார்.