காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப்.22 திருச்சி மாவட்டம், முசிறியில் காவிரி அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஏரி பாதுகாப்பு மற்றும் காவிரி அய்யாறு இணைப்பு திட்ட விவசாயிகள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயி சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத்தினரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.