மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பர்மா காலனி மூலிகை பூங்காவை முற்றிலும் சுத்தம் செய்தல் பணியையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றும் பணியையும், குறிஞ்சி நகரில் மாநகராட்சி சார்பில் நாய்களை பிடித்த பணியையும், பர்மா காலனி ரேஷன் கடை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றும் பணியையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.