கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
திருச்சி செப். 8 திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை கோரையாறு அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில் அங்கு கஞ்சா விற்றது
திருச்சி காந்திநகர் புங்கனூரை சேர்ந்த கங்காதேவி (வயது 55) என்பது தெரிய வந்தது. இதைபடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 45 ஆயிரத்து 500 மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.