ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8