தமிழகத்தின் பாரம்பரிய விழாவாக கருதப்படும் ஆடிப்பெருக்கு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்கள் மற்றும் காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் வருவதற்கும் வழிபாடு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில், ஆடிப்பெருக்கு விழாவுக்கு காவிரிக்கு வர அனுமதி மறுத்ததை கண்டித்தும், தேவாலயங்களை மட்டும் திறப்பதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo