துறையூர் நகரில் 4 பேருக்கு கொரோனா – தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது நகராட்சி நிர்வாகம்
தமிழ்நாட்டின் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் குட்டைக்கரை தெருவில் மெயின்ரோட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடை செய்துள்ளது.