11ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்
திருச்சி, ஏப் 4 திருச்சி சஞ்சீவி நகர் சூரியகாந்தி பூ தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது48) இது மகன் இஸ்ரேல் அர்னால்டு (வயது16) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 31ந் தேதி திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அன்று வெளியே சென்ற இஸ்ரேல் அர்னால்டு மயமானனார். இதுகுறித்து அவரது தந்தை ஜோசப் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.