சென்ட்ரிங் தொழிலாளர் சாவு
திருச்சி, ஏப் 4 திருச்சி திருவரங்கம் வேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார். நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக வடிவேலு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் அவரை மீது திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பரிசோதித்த டாக்டர்கள் வடிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது உறவினர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.