கொள்ளிடம் ஆற்றில் பயன்பாட்டில் இல்லாத பழைய பாலத்தின் 17 ஆவது தூண் இடிந்து விழுந்தது : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி
நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகம் காரணமாக, பயன்பாட்டில் இல்லாத பழைய பாலத்தின் 17 ஆவது தூண் இடிந்ததைத் தொடர்ந்து அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பிரதீப் குமார் அவர்கள் கொள்ளிடம் ஆற்றின் புது பாலத்தில் இருந்து இன்று (9.8.22) பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றில் நீர் வடிந்தவுடன் பழைய பாலத்தினை முழுவதுமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.