கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

0 304
Stalin trichy visit

திருச்சி வரகனேரி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 30). இவர் நாயக்கர் தெருவில் விறகுகரி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கடையின் உள்ளே இருந்த ரூ.600 திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பீட்டர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கடையில் திருடியது சந்தானபுரத்தை சேர்ந்த சாகுல்அமீதுவின் மகன் இம்ரான்கான் (19) மற்றும் வரகனேரியை சேர்ந்த 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், 2 சிறுவர்களையும் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.