தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருச்சி ஆக 11 திருச்சி பாலக்கரை வள்ளுவர் நகர் பொது கழிப்பறை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி பாலக்கரை கீழபுதூரைச் சேர்ந்த பிரசன்ன குமார் (23, ) மற்றும் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன் ( 43 )ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.