மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
திருச்சி, ஆக.4 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மணப்பாறையைச் சேர்ந்த செந்தில்குமார் (47) மணிகண்டன் (28), ஆறுமுகம் (56), தனலெட்சுமி (47) துறையூரைச் சேர்ந்த செல்வம் (36) ஆகியோர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததை அடுத்து 5 பேர் மீதும் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.