வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், நவல்பட்டு பகுதியில் கரை சாலையிலுள்ள கட்டளை வாய்க்காலில் மழையினால் நீர்வரத்து அதிகமாகி, இதன் சைஃபன் குழாய் வழியாக தண்ணீர் சென்று அண்ணாநகர் பர்ஸ்ட் ஃபேஸ் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் கேஎஸ்.எம்.கருணாநிதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் மற்றும் பலர் உள்ளன.