பாரதப் பிரதமரின் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருச்சி, மே 30. பாரதப் பிரதமர் காணொலிக் காட்சி வாயிலாக பாரதப் பிரதமரின் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றின் காரTrichy mailணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவியினை வழங்கிய நிகழ்வினை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த 10 குழந்தைகளுக்கு நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு வழங்கினார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மோகன் மற்றும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதி குழும உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் உள்ளனர்.