சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா 5 ம் நாள்

0 415
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் 5 ம் நாளில் அம்மன் மர ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைப்பெற்றது.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தைப்பூச விழாவையொட்டி கோயில் கடந்த 26ம் தேதி கோயில் உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிவாச்சாரியர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை ஏற்றி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சமயபுர மாரியம்மன் உற்சவர் அம்பாள் 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா நடைபெறும்.
5 ம் நாளான நேற்றிரவு வசந்த மண்டபத்திலிருந்து அம்மன் மர ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாரதனைக்கு பின்பு கடைவீதி மற்றும் தேரடி வீதி வழியாக சமயபுரம் கோவிலை சென்றடைந்தது. வழிநெடிகிளும் பெருந்திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வரும் 10 ம் நாளான பிப்ரவரி 4 ம் தேதி காலை 8 மணிக்குள் சமயபுரம் மாரியம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி மண்ணச்சநல்லூர், நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைந்து பின்பு ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இவ்விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் செய்திருந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.