ஆதார் அட்டையில் திருத்தம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் மனு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த கவிதா மனு அளித்தார் அந்த மனுவில் தனது ஆதார் கார்டில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இதனால் தனது வயது நூரைத் தாண்டி காட்டுவதாகவும் இதற்காக நான்கு ஆண்டுகள் அலைவதாகவும் தெரிவித்தார் எனவே இந்த மனுவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்