அமிர்தகரைசல் தயாரிக்கும் முறை -வேளாண் மாணவன் செயல் விளக்கம்..
அமிர்தகரைசல் தயாரிக்கும் முறை -வேளாண் மாணவன் செயல் விளக்கம்
கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பா. சஞ்சய் (இறுதியாண்டு மாணவன்) அமிர்தகரைசல் பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது
அமிர்த கரைசல் அல்லது கழிவு சிதைப்பான் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது, கழிவுகளை சிதைத்து உரமாக்குவது, மண் வளத்தைப் பெருக்குவது, பயிர் விளைச்சலை அதிகரிப்பது, விளைபொருட்களின் தரத்தை உயர்த்துவது என பல தரப்பட்ட பயன்களை தறுகிறது.
பயன்கள்
* இது பூ அமைப்பு மற்றும் தானியங்கள் அமைப்பை அதிகரிக்கும்.
* இது மண்ணில் ஙண்ணுயிரிகளையும், ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கிறது.
* இது சுற்றுச்சூழலுக்கு நன்மை