உடன்பிறப்புகளாய் இணைவோம்: கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்
தமிழ்நாடு முதலமைச்சரும்,தி.மு.கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “உடன்பிறப்புகளாய் இணைவோம்”என்ற கழகஉறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்கள்,அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளரும் கூட்டுறவு துறை அமைச்சருமான பெரியகருப்பன் காரைக்குடி நகரத்தில் துவக்கி வைத்த போது உடன் முன்னாள் அமைச்சர் தென்னவன், கழக மாநில இலக்கிய அணிப் புரவலரும் தொகுதி பார்வையாளருமான திருச்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் மற்றும் நகர் கழகச் செயலாளரும் நகர் மன்றத் துணைத் தலைவருமான குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.