தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார்.
வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது வீட்டில் இருந்த தனது மனைவி சுஜாதாவிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சேலத்தில் இருந்து சுரேந்தர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு வந்துள்ளார் தினமும் வீட்டில் தாயிடம் குடித்துவிட்டு தந்தை சண்டையிருப்பதை கண்டு நேற்று வீட்டில் இருந்த மகன் சுரேந்தர் தந்தையிடம் ஏன் குடித்துவிட்டு தினமும் தகராறு செய்கிறீர்கள் என திட்டியுள்ளார்.
இதனால் தந்தை ,மகன் இடையே தகராறு முற்றியுள்ளது. இதற்கிடையில் உள்ளுரில் திருமணம் செய்து கொடுத்துள்ள மகளை அழைத்து வர சுஜாதா சென்று , மகளை அழைத்து வந்தார்.
அப்போது தனது கணவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அம்மிக்கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் புகழேந்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர்.
மேலும் இறந்து போன புகழேந்தியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை பெற்ற மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது