பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
கோவை, ஆக.2 கோவை பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் இல்லத்தினை திறந்து வைத்தார். மேலும் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசனையும் வழங்கினார்.

இப்பள்ளி நீதிக்கட்சி தலைவரும், அன்னைறய சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சருமான ராவ் பகதூர் ஏ.பி.பாத்ரோ அவர்களால் 1923 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பள்ளிக்கு தந்தை பெரியார், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போன்ற பல தலைவர்கள் வருகைபுரிந்துள்ளனர்.