அளுந்தூர் பகுதியில் விபத்தை தடுக்க உடனடி நடவடிக்கை
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அளுந்தூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் அப்பகுதிமக்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோரிக்கை வைத்த சில மணி நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் பேரிகார்ட் அமைத்து கண்காணித்தனர்.