திருச்சி கமலவல்லி நாச்சியார் கோயிலில் வசந்த உற்சவம் : 5ம் நாள்
திருச்சி கமலவல்லி நாச்சியார் கோயிலில் வசந்த உற்சவத்தின் ஐந்தாம் திருநாளான இன்று தாயார் முத்து வர ஹஸ்தத்தில் எழுந்தருளினார்
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் வசந்த உற்சவத்தின் ஐந்தாம் திருநாளான இன்று தாயார் முத்து கிரீடம், முத்து வர ஹஸ்தம், முத்தாரம், மார்பில் இருதலை பக்ஷி பதக்கம், அடுக்கு பதக்கம் சாற்றிக் கொண்டு வெள்ளி தோளுக்கினியானில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வசந்த மண்டபம் சென்றடைந்தார். பின்னர், மண்டபத்தில் திருவாராதனம், சூரனாபிஷேகம் கண்டருளிய தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.