பணி கிடைக்காத ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக. 5 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத 40,000 ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கண்டித்தும் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு இன்னொரு நியமனத் தேர்வு என்ற அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்