திருச்சி ஆளுந்தூர் துணை மின் நிலையம் மற்றும் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி நாகமங்கலம், பாத்திமா நகர், அளுந்தூர், சேதுராப்பட்டி, யாகப்புடையான்பட்டி, செங்குறிச்சி, குன்னத்தூர், சூரக்குடிப்பட்டி,
கலிமங்கலம், மூவனூர், வெங்கைமண்டலம், தண்ணீர் பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், சென்னகரை, துடையூர், பாண்டியபுரம், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடுகிறது.