தேசிய கல்லூரி வணிகவியல் துறை அசோசியேஷன் துவக்க விழா!
திருச்சி தேசிய கல்லூரி வணிகவியல் துறையின் அசோசியேஷன் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஏ.எம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பாத்திமா பத்தூல் மாலுக் கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர் வாழ்க்கையில் முக்கியத்துவம், பணத்தின் மதிப்புகள், எதிர்காலத்திற்கு இவ்வாறாக தயாராவது என மாணவர்களுக்கு மத்தியில் நம்பிக்கை ஊட்டும் விதமாக உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன், வணிகவியல் துறை டீன் மற்றும் துணை முதல்வர் குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo