திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கோட்டைப்பூலாம்பட்டி பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கட்டியது மற்றும் அகற்றப்பட்டது. தொடர்பான பிரச்சனையில் பாஜக பிரமுகர் மற்றும் ஊர் முக்கியஸ்தர் மீது வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.