உடல்நலக்குறைவால் திருச்சி பாலக்கரை எஸ்.எஸ்.ஐ மரணம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த மருதண்டாக்குறிச்சி சேர்ந்தவர் கணேசன்(57). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர்.

இவர் பாலக்கரை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்ஐ யாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுநீர் கோளாறு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கணேசன் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.