உத்தரப்பிரதேச விவசாயிகள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்து திருச்சியில் சாலை மறியல் – கைது!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது எடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனையும், கொலை செய்ய தூண்டிய அஜய் மிஸ்ராவையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திருச்சி காந்தி சந்தையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.