என்.டி.ஏ. கூட்டணியில் த.வெ.க.வை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் பேட்டி
திருச்சி, மார்ச் 11 என்.டி.ஏ. கூட்டணியில் த.வெ.க.வை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்க வேண்டும். திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் பேட்டி
இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் தான் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது அதன் அடிப்படையில் தான் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். எரிபொருள் இருப்பு குறித்து அந்த துறை விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
நாளை கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இருக்காது விரைவில் தொகுதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
த.வெ.க வை என்.டி.ஏ கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.