குடிபோதையில் ரேசன் கடையை சூறையாடியவர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஆக. 7 வைரிசெட்டிபாளையத்தில் போதையில் ரேஷன் கடை பெண் ஊழியரை தாக்கி கடையை சூறையாடியவர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ரேஷன் கடையில் பணிபுரியும் சாந்தி என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் இம்மாதத்திற்கு உரிய பாமாயில் தராததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரேஷன் கடையை சூறையாடினார். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் தலைமறைவான செந்திலை உப்பிலியபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.