10 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

திருச்சி மத்திய சிறையில் 2000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. வழக்கம் போல் நேற்றும் பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய சிறையில் சிறை அதிகாரி கண்ணன் தலைமையில் சோதனை நடந்தது. அந்த நேரத்தில் திருச்சி நொச்சியத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விக்னேஸ்வரன் (வயது 21)என்பவர் தனது நண்பரை பார்க்க வந்திருந்தார். அவரை அதிகாரி சோதனையிட்டார். அப்போது அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. ஜெயிலுக்குள் இருக்கும் தனது நண்பருக்கு கொடுப்பதற்காக கஞ்சா எடுத்து வந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை எடுத்து சிறைத்துறை காவலர்கள் விக்னேஸ்வரனை கைது செய்தனர்.