அரசுப்பள்ளியில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
திருச்சி, நவ.22 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (22.11.2022) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ் ஜவகர், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் முன்னிலையில் ஆய்வு செய்து மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறைகளை குறித்தும், பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து மாணவிகளுடன் கலந்துரையாடினார்